பல்லவி
ஏ பாபமு ஜேஸிதிரா ராம
நீகே பாடைன த3ய ராது3 நே(னே)
அனுபல்லவி
நீ பாத3முலனு கன மொரலிடி3தே
நீ பாடுன வினி 1வினனட்டுண்டு3டகு நே(னே)
சரணம்
சரணம் 1
நாத3 ரூபுட3வனி வினி நே ஸ்ரீ
நாத2 நின்னு நம்மிதினி
2நாத3 புரமுனனுண்டி3யு
நன்னாத3ரிஞ்சக ஊரகுண்டு3டகு நே(னே)
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ஏ/ பாபமு/ ஜேஸிதிரா/ ராம/
என்ன/ பாவம்/ செய்தேனய்யா/ இராமா/
நீகு/-ஏ பாடைன/ த3ய/ ராது3/ நேனு/-(ஏ)
உனக்கு/ எப்பாடாகிலும்/ தயை/ வாராது/ நான்/ என்ன...
அனுபல்லவி
நீ/ பாத3முலனு/ கன/ மொரலு/-இடி3தே/
உனது/ திருவடிகளை/ காண/ முறை/ இட்டால்/
நீ/ பாடுன/ வினி/ வினன/-அட்டு/-உண்டு3டகு/ நேனு/-(ஏ)
உன்/ பாட்டிற்கு/ கேட்டும்/ கேளாதது/ போன்று/ இருப்பதற்கு/ நான்/ என்ன...
சரணம்
சரணம் 1
நாத3/ ரூபுட3வு/-அனி/ வினி/ நே/ ஸ்ரீ/
நாத/ உருவத்தினன்/ என/ செவிமடுத்து/ நான்/ இலக்குமி/
நாத2/ நின்னு/ நம்மிதினி/
மணாளா/ உன்னை/ நம்பினேன்/
நாத3/ புரமுன/-உண்டி3யு/
நாத/ புரத்தினில்/ இருந்தும்/
நன்னு/-ஆத3ரிஞ்சக/ ஊரக/-உண்டு3டகு/ நேனு/-(ஏ)
என்னை/ யாதரியாது/ சும்மா/ இருப்பதற்கு/ நான்/ என்ன...
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
சில புத்தகங்களில் 'நேனு' என்ற சொல், பல்லவி, அனுபல்லவி மற்றும் ஒவ்வொரு சரணத்தின் முடிவிலும் கொடுக்கப்பட்டுள்ளது.
சில புத்தகங்களில் 2 மற்றும் 3-வது சரணங்கள் வரிசை மாற்றிக் கொடுக்கப்பட்டளன.
1 - வினனட்டு - வினனட்லு.
2 - நாத3 புரமுன - நா தா3புரமுன : 'நா தா3புரமுன' என்பது சரியானால் 'எனது மறைவினில் இருந்தும்' என்று மொழிபெயர்க்கப்படும். ஆனால் அத்தகைய பொருள் சரியல்ல என்று தோன்றுகின்றது.
3 - நா து3ரா - நா தூ3ர - நா தூ3ரா : எல்லா புத்தகங்களிலும் 'எனது துயர்' என்று பொருள் கொள்ளப்பட்டுள்ளது. 'தூ3ரா' என்ற சொல் அகராதியில் காணப்படவில்லை. 'தூ3ர' என்ற சொல்லுக்கு 'துயர்' என்ற பொருளில்லை. தெலுங்கு அகராதியின்படி, 'து3ரடில்லு' என்ற சொல்லலுக்கு 'துயருறுதல்' என்று பொருளாகும். எனவே 'து3ரடில்லு', 'து3ர' என்பதன் திரிபாக இருக்கலாம்.
4 - பு4வனமுன - ப4வமுன.
6 - ஹ்ரு2த3ப்3ஜ - ஹ்ரு2தா3ப்3ஜ : 'ஹ்ரு2தா3ப்3ஜ' என்பது சரியல்ல என்று தோன்றுகின்றது.
Top
மேற்கோள்கள்
விளக்கம்
2 - நாத3 புரமுன : 'நாத3 புரம்' என்ற சொல்லின் பொருள் என்னவென சரிவர விளங்கவில்லை. திரு C ராமானுஜாசாரியாரின் 'The Spiritual Heritage of Tyagaraja' என்ற புத்தகத்தின் முன்னுரை (ஆராய்ச்சி நூலில்) டாக்டர் V ராகவன் அவர்கள், 'நாத3 புரம்' என்பதனை 'நத3 புரம்' (திருவையாறு) என்ற சொல்லின் சிலேடையாக தியாகராஜர் பயன்படுத்தியுள்ளார் என்று கூறுகின்றார். ஆனால் 'நத3 புரம்' என்ற சொல் இந்த கீர்த்தனையில் காணப்படவில்லை. திருவையாறுக்கு 'நாத3 புரம்' என்ற பெயர் உண்டா என்பது தெரியவில்லை. இங்கு 'திருவையாறு' என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
5 - ஸன்னுதாங்க3 - 'ஸன்னுத+அங்க3' : இவ்விடத்தில், 'அங்க3' என்ற சொல்லுக்குத் தனிப்பட்ட பொருள் ஏதும் இருப்பதாகத் தோன்றவில்லை.
எப்பாடாகிலும் - எவ்விதமாகிலும்
உன்பாட்டிற்கு - தனது பணியில் ஈடுபட்டு
இரதி பதி - காமன்
Top